இன்ஸ்டாகிராமில் நெருக்கம் - காதலனுக்கு 60சவரன் நகைகளை திருடி கொடுத்த சிறுமி!

Tamil nadu Madurai Child Abuse Crime
By Sumathi Sep 11, 2022 06:25 AM GMT
Report

60 சவரன் தங்க நகைகளை திருடிக்கொடுத்த சிறுமியால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் 

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தரம்- மீனாட்சி தம்பதி. இவர்களது மகள் 16 வயது சிறுமி. இவர் கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார்‌.

இன்ஸ்டாகிராமில் நெருக்கம் - காதலனுக்கு 60சவரன் நகைகளை திருடி கொடுத்த சிறுமி! | Girl Stole 60 Savaran Jewelry For Her Boyfriend

இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், இதனைப் பயன்படுத்தி சதீஷ்குமார் சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் உள்ள பீரோவைத் திறந்து பார்த்ததில் உள்ளே வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

60 சவரன்  நகை

இதுகுறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டதில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மாயமான நகைகள் சுமார் 18 லட்சம் மதிப்பிலானவை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன்

இன்ஸ்டாகிராமில் நெருக்கம் - காதலனுக்கு 60சவரன் நகைகளை திருடி கொடுத்த சிறுமி! | Girl Stole 60 Savaran Jewelry For Her Boyfriend

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகை மிரட்டி வாங்கியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.