மனைவியின் தலையை துண்டாக்கி கொடூர கொலை - கணவன் அதிர்ச்சி வாக்குமூலம்
கணவன், மனைவியுடன் தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம்
இலங்கை வவுனியா, புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுகிர்தரன் - சுவர்ணலதா தம்பதி. சுவர்ணலதா 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் மனைவியின் நடத்தையிலும் சுகிர்தரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றுள்ளது.
கணவன் வெறிச்செயல்
இருவரையும் சமாதானம் செய்து போலீஸார் அனுப்பி வைத்த நிலையில், சுகிர்தன் மனைவியின் தலையை அரிவாளால் வெட்டி எடுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தலையை மட்டும் கவரில் போட்டு கொண்டு மீண்டும் காவல்நிலையம் எடுத்துச் சென்றுள்ளார்.
தொடர்ந்து மனைவியை கொன்று உடலை காட்டுப்பகுதியில் வீசியுள்ளேன் என வாக்குமூலம் அளித்து சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.