ஆண் நண்பருடன் ஃபோட்டோ; தனியாக இருந்த காதலி - ஆத்திரத்தில் காதலன் வெறிச்செயல்!
பேசாமல் தவிர்த்து வந்ததால் காதலியை, இளைஞர் கொலை செய்துள்ளார்.
காதல் விவகாரம்
பொள்ளாச்சி, வடுகபாளையத்தில் பொன்முத்து நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கார் பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அதில் அஸ்விகா என்பவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது வீட்டு அருகில் பிரவீன்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதை அறிந்த பெற்றோர் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அங்கிருந்து அண்ணாமலையார் நகருக்கு குடும்பத்துடன் பிரவீன்குமார் குடியேறினார். இந்நிலையில், அஸ்விகா அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
காதலன் வெறிச்செயல்
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்து ஆய்வு செய்ததில், அஸ்விகாவை முகம், கழுத்து உள்ளிட்ட 5 இடங்களில் வெட்டு காயம் பலமாக இருந்துள்ளது. பின் விசாரணை மேற்கொண்டதில் காதலன் பிரவீன்குமார்தான் கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரே சரணடைந்துள்ளார். மேலும், அஸ்விகா, தன் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த பிரவீன் குமார், அஸ்விகாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அஸ்விகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சென்று கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தற்போது பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.