காதலால் 8 மாதம் கர்ப்பம்; ரயில் முன் பாய்ந்த காதலன் - காதலி எடுத்த முடிவு
திருமணத்திற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி தற்கொலை செய்துள்ளனர்.
திருமணத்திற்கு எதிர்ப்பு
திருப்பத்துார், பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் நித்தின் ராகுல்(21). காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தரணி(21). இருவரும் பெங்களூருவிலுள்ள வியாசா நர்சிங் கல்லுாரியில்,
2ம் ஆண்டு படித்தபோது, காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இதில் தரணி, 9 மாத கர்ப்பமானார். எனவே நித்தின் ராகுலிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
காதல் ஜோடி தற்கொலை
ஆனால் திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், ராகுல் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையறிந்த தரணி வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் தரணி வயிற்றிலிருந்த சிசுவும் வயிற்றிலிருந்து வெளியேறி இறந்த நிலையில் கிடந்துள்ளது. உடனே உடல்களை மீட்ட ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.