கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி - ஒரே வாரத்தில் விபரீதம்
காதலியை கொலை செய்துவிட்டு, காதலன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
விழுப்புரம், திருவெண்ணெய் நல்லூரை சேர்ந்தவர் ஆகாஷ்(19). இவர் அங்குள்ள கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அபிநயா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் சென்னை வந்து பெரம்பூரில் ராஜீவ்காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும், இவர்கள் தங்கியிருந்த வீடு உள்பக்கம் பூட்டியே இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்ததில், ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விபரீத முடிவு
உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கு, மாணவி அபிநயாவும் கண் மற்றும் வாயில் ரத்த காயங்களுடனும், வாயில் நுரை தள்ளியவாறும் தரையில் சடலமாக கிடந்துள்ளார். இரு சடலங்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டதில்,
கல்லூரி விடுமுறை என்பதால் இருவரும் தங்களது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி, சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர், இருவரும் கணவன் - மனைவி எனக் கூறி வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர்.
அப்போது இருவருக்கு தகராறு ஏற்பட்டதில், அதில், ஆத்திரமடைந்த ஆகாஷ், அபிநயாவை அடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.