தாய் செய்த செயல் - மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கிய மகன்!

Cauliflower Crime Odisha
By Sumathi Dec 25, 2023 09:03 AM GMT
Report

மகன், தனது தாயை கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலிஃபிளவர்

ஒடிசா, சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா(70). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.

odisha

தொடர்ந்து, கணவரை இழந்த சாரதா தனது மூத்த மகனுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில், மூத்த மகன் உடல்நிலை காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது இளைய மகனான சஸ்துருகன் தனது தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிட்டுள்ளார்.

80 வயது மாமியாரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை - பதற வைக்கும் காட்சி!

80 வயது மாமியாரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை - பதற வைக்கும் காட்சி!

கொடூரத் தாக்குதல்

அதனைத் தொடர்ந்து தாய் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாய் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

தாய் செய்த செயல் - மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கிய மகன்! | Son Thrashes Mother Electric Pole For Cauliflower

மாமியாரை காப்பாற்ற சென்ற மனைவியையும் தாக்கியுள்ளார். யாரேனும் தடுத்தால் தாக்குவேன் எனவும் மிரட்டம் விடுத்துள்ளார். ஒரு வழியாக அவரிடமிருந்து ஊர் மக்கள் மனைவியையும், தாயையும் மீட்டனர். உடனே இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.