காதலியோடு சென்ற இளைஞன் - நடுரோட்டில் தாயை மிதித்து கொடூரமாக தாக்கிய பெண் வீட்டார்!

Crime Kallakurichi
By Sumathi Jun 16, 2023 05:42 AM GMT
Report

பெண்ணின் குடும்பத்தார் மாப்பிள்ளையின் தாயைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

கள்ளக்குறிச்சி, எஸ்.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். முடி திருத்தும் வேலை செய்து வந்தார். இவருடைய மகன் சூர்யா. ஐ.டி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்.

காதலியோடு சென்ற இளைஞன் - நடுரோட்டில் தாயை மிதித்து கொடூரமாக தாக்கிய பெண் வீட்டார்! | Youngster Mother Attack By His Lovers Relatives

தொடர்ந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அப்பெண்ணை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். முன்னதாக இதற்கு பெண்ணின் உறவினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தாய் மீது தாக்குதல்

மேலும், சில மாதங்களாகவே சூர்யா வீட்டிற்குச் சென்று சண்டையிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, சூர்யாவின் தாய் சுமதி வீட்டில் தனியாக இருந்தபொழுது பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பயங்கர சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது எனக்குத் தெரியாது என்று கூறிய நிலையில் அவரது தாயை ஆபாசமாக பேசி கும்பலாகச் சேர்ந்து நடுரோட்டில் மிதித்து கொடூரமாகத் தாக்கினர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதனையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார், பெண்ணின் தாய் சிவகாமி, தந்தை ஏழுமலை உள்ளிட்ட அவரது உறவினர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.