80 வயது மாமியாரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை - பதற வைக்கும் காட்சி!

Kerala Viral Photos Crime
By Sumathi Dec 16, 2023 06:54 AM GMT
Report

மாமியாரை, மருமகள் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரத் தாக்குதல் 

கேரளா, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மனைவி மஞ்சுமோள் (42). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

kerala daughter in law issue

தாமஸ் தனது 80 வயதான தாய் எலியம்மா வர்கீஸை தன் வீட்டில் வைத்து கவனித்து வருகிறார். இந்நிலையில், மஞ்சுமோள் தனது மாமியார் எலியம்மா வர்கீஸை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன் - ஹனிமூன் அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு!

மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன் - ஹனிமூன் அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு!

மருமகள் கைது

அதில், அவரது மருமகள் மஞ்சுமோள் அவரை உள்ளே உள்ள ஒரு அறைக்கு செல்லுமாறு சத்தம் போட்டு கூறி எலியம்மாவை மிகவும் கொடூரமாக கீழே தள்ளிவிடுகிறார். அதில் கீழே விழுந்த எலியம்மா எழுந்து தன்னை சரிசெய்து கொள்ள முயற்சி செய்து வேதனையோடு அங்கிருந்து நகர்ந்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

80 வயது மாமியாரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை - பதற வைக்கும் காட்சி! | Daughter Law Beating Mother Law Kerala

இதனை தாமஸ்தான் வீடியோவாக எடுத்து வெளியிட்டது தெரியவந்துள்ளது. அதன்பின், போலீஸார் இதுகுறித்து அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன்மூலம், மஞ்சுமோள் எலியம்மாவை பின்னால் இருந்து தள்ளிவிட்டு தாக்கியது உறுதியானது. தொடர்ந்து, மருமகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.