மாமியாரை கொடூரமாக வெட்டிக் கொன்ற மருமகள் - பகீர் பின்னணி!
மருமகள், மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகள் ஆத்திரம்
பட்டுக்கோட்டை, கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரின் மனைவி பர்வீன் பானு. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஜேம்ஸுக்கும் பர்வீன் பானுவுக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாகியுள்ளது. இதில் பர்வீன் பானுவுக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது.
கொடூரக் கொலை
இதனையடுத்து இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மகனை ஜாமீன் எடுக்க முயன்ற மாமியார் ஆரோக்கிய மேரியிடம் பானு சண்டையிட்டுள்ளார்.
அப்போது மாமியார், என் மகனை நான் ஜாமீனில் எடுப்பேன். அவன் வெளியே வந்ததும் உன்னையும், உன் மகன்களையும் கொலைசெய்துவிடுவான் எனக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பானு மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து, பானுவை கைது செய்த போலீஸார், கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரணை செய்துவருகின்றனர்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

சரிகமப- வில் நடுவருக்கு போட்டியாளர் கொடுத்த பரிசு... அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம்! Manithan
