தற்கொலைக்கு முன் நடிகை சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம் - வைரலாகும் போட்டோ..!
80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி சில்க் ஸ்மிதா. இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. குடும்ப சூழல் காரணமாக சிறு வயதிலேயே அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
சினிமா பயணம்
அவரின் திருமணம் வாழக்கையும் இன்புற அமையாவில்லை.இதையடுத்து தன் வீட்டை விட்டு வெளியேறி மேக் அப் ஆர்டிஸ்ட்டாக திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
பின்னர் பிரபல இயக்குநர் வினு சக்ரவர்த்தி இவருக்கு பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
தனது மனைவி மூலம் அவருக்கு நடன கலையை கற்றுக்கொடுத்து தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.
அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
கவர்ச்சி நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளம் வந்தவர் சில்க் ஸ்மிதா இவர், நிறைய பிரபல ரோல்களில் நடித்துள்ளார்.
தற்கொலை முன் கடிதம்
பின்னர், 1996ம் ஆண்டு, யாரும் எதிர்பாராத விதமாக, சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். 1979ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் 1996ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்து வந்தார்.
சில்க் ஸ்மிதா இறக்கும் போது அவருக்கு வயது 35. தற்கொலை செய்வதற்கு முன் சில்க் ஸ்மிதா தனது கைபட தெலுங்கில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
நடிகையாக மிகவும் கஷ்டப்பட்டேன், என்னை யாரும் நேசிக்கவில்லை, என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளது, ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை.
5 வருடங்களாக ஓருவர் எனக்கு வாழ்வு தருவதாக கூறினார். ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான். நான் களைத்துப் போனேன்.
இந்த கடிதம் எழுத கூட மிகவும் சிரமப்பட்டேன் என முழுவதும் சோகமான விஷயங்களை கூறியிருக்கிறார். அந்த கடிதத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை - பிரபல நடிகை பகீர் பேட்டி..!

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
