மைதானத்திற்கு கூட வரல; சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்றிய சுப்மன் கில்? பிசிசிஐ நடவடிக்கை!
சுப்மன் கில் பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க வராதது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது.
இதற்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும்,
சுப்மன் கில் எந்த போட்டிக்கும் வராமல் ஹோட்டல் அறையிலேயே அதிக நேரம் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க கூட அவர் மைதானம் வரவில்லை.
சுப்மன் கில் செயல்
இதற்கிடையில், டி20 உலகக்கோப்பையை நேரில் பார்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர், சாரா டெண்டுல்கர் இருவரும் அமெரிக்கா வந்துள்ளனர்.
இதனால் சுப்மன் கில் ஓய்வு நேரங்கள் மற்றும் போட்டியின் போதும் கூட சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்ற செல்வதாக கூறப்படுகிறது.