காகத்தை கட்டிப்போட்ட கறிக்கடைக்காரர் - மற்ற காகங்கள் ஒன்றுகூடி செய்த செயல்!

India Andhra Pradesh
By Jiyath Jul 18, 2024 07:10 AM GMT
Report

கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை கட்டிப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டப்பட்ட காகம் 

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிக்கறி கடை அருகே காகங்கள் தொடர்ந்து சத்தமிட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோழிக்கடைக்காரர் மற்ற காகங்களை அச்சுறுத்துவதற்காக, 

காகத்தை கட்டிப்போட்ட கறிக்கடைக்காரர் - மற்ற காகங்கள் ஒன்றுகூடி செய்த செயல்! | Shopkeeper Who Tied Up A Crow In Andhra Pradesh

ஒரு காகத்தை பிடித்து கட்டி வைத்துள்ளார். கட்டப்பட்ட காகத்தின் துயர அலறல் சத்தத்தை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அங்கு ஒன்றுகூடி அதிகளவு சத்தம் எழுப்ப தொடங்கியுள்ளது .

இன்ஸ்டகிராம் மூலம் கணவரை விவாகரத்து செய்த இளவரசி - என்ன காரணம்?

இன்ஸ்டகிராம் மூலம் கணவரை விவாகரத்து செய்த இளவரசி - என்ன காரணம்?

அதிர்ச்சி சம்பவம் 

இதனால் காகத்தை அவிழ்த்து விடுமாறு அப்பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்கள் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து காகத்தின் காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவர் அவிழ்த்து விட்டார்.

காகத்தை கட்டிப்போட்ட கறிக்கடைக்காரர் - மற்ற காகங்கள் ஒன்றுகூடி செய்த செயல்! | Shopkeeper Who Tied Up A Crow In Andhra Pradesh

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோழிக்கறி கடைக்காரரின் செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.