பள்ளி பேருந்தில் பழக்கம்; 14வயது மாணவனுடன் 35வயது பெண் பல முறை பாலியல் உறவு - அதிர்ச்சி!

By Jiyath Nov 16, 2023 04:18 AM GMT
Report

கவுன்சிலிங் என்ற பெயரில் 14 வயது மாணவனுடன் பலமுறை பாலியல் உறவு கொண்ட பள்ளி வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.  

தகாத உறவு

அமெரிக்காவின் பக்ஸ் கவுன்டி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் கவுன்சிலிங் வழிகாட்டியாக பணியாற்றியவர் கெல்லி ஆன் ஸ்கட் (35). இவர் அந்த பள்ளியில் படிக்கும் 14 மாணவன் ஒருவருடன் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் முதல் பாலியல் உறவில் இருந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி பேருந்தில் பழக்கம்; 14வயது மாணவனுடன் 35வயது பெண் பல முறை பாலியல் உறவு - அதிர்ச்சி! | Sexual Intercourse With A 14 Year Old Student

கெல்லியின் வீட்டில், அந்த மாணவரும் கெல்லியும் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அதனை பார்த்த கெல்லியின் உறவினர் ஒருவர் உடனடியாக வீட்டுக்குள் சென்று அந்த மாணவனை வெளியே செல்லும்படி கூறியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த மாணவன், பெற்றோரை போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளான். பின்னர் தனது பெற்றோரிடம், கெல்லியுடன் காதல் மற்றும் பாலியல் உறவில் இருந்ததை குறித்து அந்த மாணவன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து.. அதை எதிர்பார்த்தால் நடக்காது - பாக். வீரர் சர்ச்சை பேச்சு!

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து.. அதை எதிர்பார்த்தால் நடக்காது - பாக். வீரர் சர்ச்சை பேச்சு!

ஜாமினில் விடுவிப்பு

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் "பள்ளி பேருந்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் ஸ்நாப்சாட்டில் இருவரும் உரையாடியுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவனுடன் கெல்லி பல முறை பாலியல் உறவு வைத்திருக்கிறார்.

பள்ளி பேருந்தில் பழக்கம்; 14வயது மாணவனுடன் 35வயது பெண் பல முறை பாலியல் உறவு - அதிர்ச்சி! | Sexual Intercourse With A 14 Year Old Student

மேலும், மாணவனின் வீட்டில் வைத்தும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கெல்லியின் காதணிகளை மாணவனின் வீட்டிலிருந்து அதிகாரிகள் கண்டெடுத்தனர். கேலியும் தனது குற்றத்தை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கெல்லியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனாலும் ரூ.20.80 லட்சம் தொகைக்கான ஜாமீனில் கெல்லி விடுவிக்கப்பட்டார். மேலும், அந்த மாணவன் மற்றும் மாணவனின் குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டள்ளார்.