கூல்டிரிங்ஸ் கொடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..அதிர்ச்சியான மருத்துவர்கள்!

Attempted Murder Sexual harassment Maharashtra Child Abuse
By Sumathi Jul 02, 2022 05:21 PM GMT
Report

வயிற்று வலி என்று மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

9 வயது சிறுமி

மகாராஷ்டிரா, தானே மாவட்டம் பிவண்டி. இப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தனது தோழிகளுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

sexual harrasment

அப்போது கணேஷ் என்கிற இளைஞர் அந்த சிறுமியிடம் பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சிறுமிக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்திருக்கிறார்.

 பாலியல் வன்கொடுமை

அதை குடித்ததும் சிறுமி மயங்கி இருக்கிறார். அப்போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பின்னர் மயக்கம் தெளிந்ததும் அந்த சிறுமி அழுத போது, இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார்.

maharashtra

வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கூல்ட்ரிங்ஸ் கொடுத்தாங்க

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கும் தகவலை சொல்ல, பெற்றோரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்று சிறுமியிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, அந்த அங்கிள் எனக்கு கூல்ட்ரிங்ஸ் கொடுத்தாங்க.

அதை குடிச்சதும் மயங்கி விழுந்துட்டேன். அப்புறம் நடந்தது தெரியல என்று சொல்லி இருக்கிறார். அப்புறம் மிரட்டுனாங்க என்றும் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அந்த சிறுமி சொன்ன வாக்குமூலத்தின் படி போலீஸிடம் புகார் அளிக்க,

 கடுங்காவல்

சிறுமியிடம் விசாரணை நடத்தி கணேஷை கைது செய்தனர். இந்த வழக்கில் கணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

விசாரணை முடிந்து கணேஷ் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .     

குணமடைந்த டி.அர்.. லண்டனில் மகன்களுடன் வைரல் புகைப்படம்!