குணமடைந்த டி.ஆர்.. லண்டனில் மகன்களுடன் வைரல் புகைப்படம்!
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் டி. ராஜேந்தர் தனது மகன்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
டி. ராஜேந்தர்
இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் 19 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்க புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கண்ணீர் மல்க
இரண்டு வார காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறுவதாக தெரிவித்தார். மேலும் தன்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் டி. ராஜேந்தர் சிகிச்சை முடிந்து தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்.
வைரல்
அவருடன் சிலம்பரசன்,குறளரசன்,இலக்கியாவின் மகன் சேஷன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதன் மூலம் விரைவில் சிகிச்சைகளை முழுமையாக முடித்துக் கொண்டு டி.ராஜேந்தர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே ஓவரில் 35 ரன்கள்.. தட்டி தூக்கிய பும்ரா - உலக சாதனை!