மகாராஷ்டிரா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: 13 கொரோனா நோயாளிகள் பரிதாப மரணம்

corona fire accident
By Fathima Apr 23, 2021 02:57 AM GMT
Report

மகாராஷ்டிராவின் கோவிட் மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 நோயாளிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் வசை என்ற இடத்தில் உள்ள கோவிட் மையத்திலேயே இக்கொடூர விபத்து நடந்துள்ளது.

மின்கசிவால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன, அதிகாலை 3.30 மணி அளவில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏசி வெடித்து தீப்பிடித்த போதே விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீ பற்றிய போது தீவிர சிகிச்சை பிரிவில் 17 பேர் இருந்ததாகவும், அவர்களில் 4 பேர் மட்டுமே வெளியே வந்ததாகவும், மற்றவர்களால் வெளியே வர முடியாத காரணத்தினால் பலியானதாகவும் கூறப்படுகிறது.