கனகாவின் இந்த நிலைக்கு காரணமே இதுதான் - முதல்முறை போட்டுடைத்த சரத்குமார்!
கனகாவின் நிலை குறித்து நடிகர் சரத்குமார் தகவல்கள் தெரிவித்துள்ளார்.
நடிகை கனகா
தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியே உள்ளார். தற்போது சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். படத்தில் வாய்ப்பில்லை, காதல் ஒன்றுகூடவில்லை, அப்பாவுடன் சொத்து பிரச்சனை என வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
இந்நிலையில் இவரது இந்த நிலை குறித்து நடிகர் சரத்குமார் தகவல் தெரிவித்துள்ளார். அதில், கனகா ஒரு மிகச்சிறந்த உழைப்பாளி. சினிமாவின் மீது அளவு கடந்த காதல் வைத்திருந்தார்.
சரத்குமார் தகவல்
இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சோகங்கள் தான் இவர் எந்த அளவிற்கு மனித வாடையை விரும்பாமல் இருக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத துயரங்கள் மற்றும் பலர் செய்த துரோகங்களும் இவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து கடுமையான மன அழுத்தத்தில் தள்ளி விட்டது.
அதிலிருந்து வெளி வர முடியாமல் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை நினைத்து நினைத்து கனகா தற்போது தனிமையில் தன் வீட்டில் யாரையும் பார்க்க விரும்பாமல் வசித்து வருகிறார். கனகா நினைத்தால் மட்டும் தான் இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வந்து சக மனிதர்களோடு சகஜமாக பழகக்கூடிய நிலைமை ஏற்படும்.
இல்லையெனில் இது போல வீட்டுக்குள் தன்னை தனியாக பூட்டிக்கொண்டு வாழக்கூடிய நிலையில் இருந்து வெளிவர முடியுமா? என்பது சந்தேகம் தான் எனக் கூறியுள்ளார்.