நாக சைதன்யாவை சமந்தா பிரிய காரணமே இதுதான் - பல வருடத்திற்குப் பின் உடைந்த சீக்ரெட்!

Samantha Naga Chaitanya Divorce
By Sumathi Feb 24, 2024 08:05 AM GMT
Report

திருமண வாழ்க்கை தொடர்பான சமந்தாவின் பேட்டி வைரலாகி வருகிறது.

 நடிகை சமந்தா 

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

samantha - naga chaitanya

இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் விவாகரத்து அறிவிப்பு என்பது இன்றும் பேசு பொருளாக இருந்து வருகிறது. தொடர்ந்து, அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது கேரியரில் படு பிடியாக வலம் வருகிறார்.

கடவுள் தான் காப்பாத்தணும் - கடைசியா ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா!

கடவுள் தான் காப்பாத்தணும் - கடைசியா ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா!

 திருமண வாழ்க்கை

இந்நிலையில் திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, “பொருளாதார ரீதியாக கணவரை சார்ந்து பெண்கள் இருப்பதில்லை. தங்களது தேவைகளை தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். முக்கியமாக தாங்களே சம்பாதித்து ஆண்களுக்கு ஈடாக தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.

நாக சைதன்யாவை சமந்தா பிரிய காரணமே இதுதான் - பல வருடத்திற்குப் பின் உடைந்த சீக்ரெட்! | Samanthas Breakup With Naga Chaitanya Reason

கணவர்கள் தங்களது மனைவிகளுக்கு சம உரிமையை கொடுக்க வேண்டும். அவர்களிடம் நண்பர் போல் பழக வேண்டும். பெண்களை அடிமைப்படுத்தக்கூடாது. ஆனால் அப்படி ஆண்கள் நடந்துகொள்ளாதபோதுதான் அந்த திருமண உறவு கஷ்டமாகிவிடுகிறது. வேறு வழியே இல்லாமல் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.