விரைவில் ஓய்வா..? மறைமுகமாக சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரோகித் சர்மா.!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து பேசியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ரோகித் சர்மா
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் இறுதி போட்டி, ஒரு நாள் கோப்பை இறுதி போட்டி வரை சென்று தோல்வியடைந்தது.
வரும் டி20 உலககோப்பைக்கும் அவரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை அணிக்கு கோப்பையை அவர் இந்திய அணிக்கு பெற்று கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கேப்டனாக மட்டுமின்றி வீரராகவும் ரோகித் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதங்களை விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
ஓய்வு
தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டு வரும் அவர், ஓய்வு குறித்து பேசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
5-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு தினேஷ் கார்த்திக்கிடம் பேசிய அவர், "ஒரு நாள் நான் என்னுடைய ஆட்டம் போதுமானதாக இல்லை என்று உணர்ந்தால், ஓய்வு பற்றி பேசுவேன், அதைப் பற்றி தெரியப்படுத்துவேன் என்றேன்.
ஆனால், உண்மையாக கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் எனது கிரிக்கெட் உண்மையில் உயர்ந்துள்ளது என்ற ரோகித், நான் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன் என்று குறிப்பிட்டார்.