உலககோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா கழட்டி விடும் BCCI...புது கேப்டன் இவரா..?
துவங்கவிற்கும் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியன் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் மாற்றப்படலாம் என நம்பப்படுகிறது.
கேப்டனாக ரோகித்
மூன்று ஃபார்மட் டெஸ்ட், ஒருநாள், டி 20 என அனைத்திலும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் ஷர்மாவே தொடர்ந்து வருகின்றார். அண்மையில் டெஸ்ட் உலகக்கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறை இறுதி போட்டிக்கு சென்றும் வெல்ல முடியாமல் தோல்வி அடைந்தது.அதன் வெளிப்பாடாக அப்போதே கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் மாற்றப்படுவார் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் அவரே தற்போது வரை நீடித்து வருகின்றார்.
ஆனால் இந்த நிலை வரும் உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கு பிறகு மாற்றப்படும் என நம்பப்படுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ரோகித், விராட் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தங்களது ஓய்வை டெஸ்ட் போட்டியில் அறிவிப்பார்கள் என தெரிகிறது. இருப்பினும் அவர்கள் ஒருநாள் மற்றும் டி20 போன்ற தொடர்களில் விளையாடுவார்கள்.
அடுத்த கேப்டன்..??
அவ்வாறு ரோகித் சர்மா தனது ஓய்வை அறிவித்தால், அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடவிருக்கும் என்ற காரணத்தினால் தற்போது இந்திய அணியின் நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் ஓய்வு பெரும் சூழலில் அணியை வழிநடத்தி செல்ல, இளமை மற்றும் அனுபவம் மிக்க வீரர் ஒருவர் தேவைப்படுவதால், இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக அடுத்த கே.எல்.ராகுல் அல்லது ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இருவரில் ஒருவர் வருவார்கள் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் தற்போது வரை பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கும் சூழலில், உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு, இது தொடர்பான செய்திகள் வெளிவரும்.