என் முடிவில் தலையிடுகிறார் - கம்பீர் மீது கடும் கோபத்தில் ரோகித் சர்மா!

Rohit Sharma Indian Cricket Team Gautam Gambhir
By Sumathi Aug 08, 2024 04:30 PM GMT
Report

கம்பீரின் செயல் ரோகித் சர்மாவை கோபமடையச் செய்துள்ளது.

கம்பீர் செயல்

50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு, இலங்கையிடம் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை இழந்துள்ளது.

gambhir - rohit sharma

இது ரோகித் சர்மாவை கோபமடைய வைத்துள்ளது. இலங்கைத் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டனாக செயல்பட விடாமல் கம்பீர் தலையிட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கம்பீர் பேட்டிங் வரிசையை ரோகித் சர்மாவின் பேச்சை மீறி மாற்றி இருக்கிறார்.

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு; இதை செய்யனும் - ரிஷப் பண்ட் அறிவிப்பு!

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு; இதை செய்யனும் - ரிஷப் பண்ட் அறிவிப்பு!

ரோகித் சர்மா அதிருப்தி

அக்சர் பட்டேல் போன்ற வீரர்களையெல்லாம் நடு வரிசையில் களமிறக்கியுள்ளார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் முஹமது சிராஜ் என்ற ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் வைத்து களமிறங்கியதும் குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது.

என் முடிவில் தலையிடுகிறார் - கம்பீர் மீது கடும் கோபத்தில் ரோகித் சர்மா! | Rohit Sharma Is Upset With Gambhir Interference

இது அனைத்துமே கம்பீர் எடுத்த முடிவு என தெரிகிறது. முதல் தொடரிலே கம்பீர் பயிற்சியாளராக மோசமாக செயல்பட்டு இருக்கிறார் என்று ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா கம்பீர் மீது புகார் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.