சவுதியில் கோர சாலை விபத்து; இந்தியர்கள் 9 பேர் பலி - என்ன நடந்தது?
சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
சவுதி அரேபியா, ஜிஷான் நகரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 15 பேர் உயிரிழந்தனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அந்நாட்டு தூதரகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்.
9 இந்தியர்கள் பலி
சவுதி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. மேலும் முழு ஆதரவு அளித்து வருகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
தகவல் அளிப்பதற்கு தனி ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 9 இந்தியர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

சதாம் ஹுசைனைக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் : அலி காமெனிக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை IBC Tamil

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
