சோறு போடாமால் அடித்துச் சித்ரவதை செய்த பிள்ளைகள் -வயதான அப்பா அம்மா எடுத்த விபரீத முடிவு!
வயதான அப்பா அம்மாவுக்கு உணவு கூட கொடுக்காமல் பிச்சை எடுங்கள் என்று அவமானப்படுத்தியுள்ளனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஹசாரிராம் பிஸ்னாய் - சாவ்லி தேவி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தனியாக வசித்து வந்த தம்பதியைக் கடந்த இரண்டு நாட்களாக வெளியில் காணவில்லை என அருகில் உள்ளவர்கள் மகன்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வயது முதிர்ந்த தம்பதியினர் வீட்டுத் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
இது குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் இருவரும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் தம்பதிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
தற்கொலை
அதில், அந்த தம்பதியின் மகன்களும், மருமகள்களும் சொத்து பிரச்சனையில் சித்திரவதை செய்து மிரட்டியதாகவும், சொத்து கேட்டு மகன்கள், அடித்துத் துன்புறுத்தியதாகவும், கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தங்களிடம் உள்ள அனைத்தையும் பிடுங்கிவிட்டு, வயதான அப்பா அம்மாவுக்கு உணவு கூட கொடுக்காமல் பிச்சை எடுங்கள் என்று மகன்கள் அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த பிஸ்னாய் - சாவ்லி தேவி தற்கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து கோட்வாலா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.