இனி.. ரயில் பெர்த்தில் பயணிகள் இவ்வளவு நேரம் தான் தூங்கலாம் - ரயில்வே நடவடிக்கை!

Indian Railways
By Sumathi Jun 28, 2024 03:13 AM GMT
Report

 ரயில்வே பெர்த் விதிகளில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

 ரயில்வே பெர்த்

இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில் உள்ளது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.

இனி.. ரயில் பெர்த்தில் பயணிகள் இவ்வளவு நேரம் தான் தூங்கலாம் - ரயில்வே நடவடிக்கை! | Railway Decreases Sleeping Hours In Berth Details

இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளித்து அவ்வப்போது சில முடிவுகளை எடுக்கும். அதன்படி, பயணிகளின் தூங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் நடுத்தர பெர்த் ஒதுக்கப்பட்ட பயணிகள் 8 மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும். முன்பு இந்த நேரம் 9 மணிநேரமாக இருந்தது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க முடியும். இப்போது நடுத்தர பெர்த்தை இரவு 10 மணிக்குப் பிறகுதான் திறக்க வேண்டும்.

ஹோட்டலாக மாறப்போகும் ரயில் கோச்; இனி ஈசி தான் - தெற்கு ரயில்வே அதிரடி

ஹோட்டலாக மாறப்போகும் ரயில் கோச்; இனி ஈசி தான் - தெற்கு ரயில்வே அதிரடி

நடைமுறை மாற்றம்

காலை 6 மணிக்குள் பயணிகள் நடுத்தர பெர்த்தை மூட வேண்டும். மிடில் பெர்த் பயணிகள் பகலில் தூங்கக்கூடாது. இதன் மூலம், கீழ் பெர்த் பயணிகள் 8 மணி நேரத்திற்குப் பிறகு நடுத்தர பெர்த்தை மூடுமாறு கேட்க உரிமை உண்டு. பக்க மேல் பெர்த்தில் உள்ள பயணிகள் பகல் நேரத்தில் கீழ் பெர்த்தில் அமரலாம்.

இனி.. ரயில் பெர்த்தில் பயணிகள் இவ்வளவு நேரம் தான் தூங்கலாம் - ரயில்வே நடவடிக்கை! | Railway Decreases Sleeping Hours In Berth Details

இந்த விதி RAC டிக்கெட் பயணிகளுக்கும் பொருந்தும். இருப்பினும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பக்கவாட்டு மேல் (Side Upper) பெர்த் பயணிகள் அமர அனுமதிக்கப்படுவதில்லை.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் நீண்ட நேரம் தூங்க சக பயணிகள் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.