புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைவு - சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 98 மில்லியன் கனஅடியாக உள்ளது.
புழல் ஏரி
புழல் ஏரிக்கு நீர்வரத்து 102 கனஅடியாக சரிந்து உள்ள நிலையில் ,3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2490 மில்லியன் கனஅடியாக உள்ளது.சென்னை குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 98 மில்லியன் கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 307 மில்லியன் கனஅடியாக உள்ளது.
நீர்இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு குறித்து நிலையில் இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பரம்பாக்கம் - 40.9%
புழல் - 75.45%
பூண்டி - 2.66%
சோழவரம் - 9.06%
கண்ணன்கோட்டை - 61.4% யாக உள்ளது.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
