பஞ்சாப் அணியால் என் சந்தோஷமே போச்சு; திருப்தியே இல்ல.. கதறிய பிரீத்தி ஜிந்தா!

Punjab Kings IPL 2024
By Sumathi May 06, 2024 01:30 PM GMT
Report

பஞ்சாப் அணியின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

punjab kings

கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், சாம் கரண் கேப்டன்சி பணியை மேற்கொண்டு வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் சொந்த மண்ணிலேயே பஞ்சாப் தோல்வியை தழுவியது.

ரகசியமாக கையெழுத்தான contract!! PBKS அணியில் ரோகித் சர்மா - சூசகம் சொன்ன ப்ரீத்தி ஜிந்தா

ரகசியமாக கையெழுத்தான contract!! PBKS அணியில் ரோகித் சர்மா - சூசகம் சொன்ன ப்ரீத்தி ஜிந்தா

பிரீத்தி ஜிந்தா வருத்தம்

இருப்பினும் பஞ்சாப் அணி அடுத்து விளையாடவுள்ள 3 போட்டிகளில் 3லும் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பேசுகையில், பஞ்சாப் அணியின் செயல்பாடுகளில் நிச்சயம் திருப்தியோ, மகிழ்ச்சியோ இல்லை. கடைசி பந்தில் மட்டும் 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம்.

preity zinta

அதேபோல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயத்தில் இருக்கிறார். சில போட்டிகளில் மிகச் சிறந்த ஆட்டத்தையும், சில போட்டிகளில் எதிர்பார்த்த ஆட்டத்தையும் வீரர்கள் வெளிப்படுத்தவில்லை.

வரும் காலங்களில் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளை வென்றால் மட்டுமே சிறந்த சீசனாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.