பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர்..Live லொக்கேஷன் அனுப்பிய மாணவி - நடந்த பயங்கரம்!
தனது கல்லூரியில் படித்த இளம்பெண்ணைப் பேராசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண்
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் (வயது 25). இவர் கோவையில் உள்ள கல்லூரிப்எம்எஸ்சி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வேலையில் சேரும்போது அனைத்தைக் கல்விச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளார்.
பின்னர், அந்த வேலையை விட்டு நின்றுள்ளார்.அப்போது இளம்பெண்ணின் சான்றிதழ்களை நிறுவனத்திடம் இருந்து திருப்பி கேட்டுள்ளார். அந்த நிறுவனத்தினர் கொடுக்க மறுத்ததாக்கத் தெரிகிறது. இந்த நிலையில் கோவையில் கல்லூரியில் படிக்கும் போது தனக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர் சிவப்பிரகாசம் (45) என்பவரின் உதவி கேட்டுள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு அந்த இளம்பெண்ணைச் சிவப்பிரகாசம் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, உனது சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துள்ளேன். வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கித் கூறி கோவைக்கு அழைத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மேலும் சிவப்பிரகாசத்தின் பேச்சை நம்பி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.அப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அங்குள்ள பாத்ரூமிற்கு சென்று கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தனது தோழிக்குத் தெரிவித்த பின்னர் தான் இருக்கும் இடத்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கூகுள் மேப் மூலம் லொக்கேஷன் ஷேர் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிவப்பிரகாசத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
