கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் துருவி துருவி விசாரணை..!

Tamil nadu
By Thahir Jun 12, 2022 02:49 AM GMT
Report

சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் ஏற்கனவே ஈரோட்டை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனை நிர்வாகிகள்,மருத்துவர்கள், ஊழியர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் துருவி துருவி விசாரணை..! | Private Hospital Doctors Investigation

இந்நிலையில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய தனியார் மருத்துவமனைகள் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓசூர் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர்கள்,

மருத்துவர்கள் ஒரு காரிலும், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவர்கள் ஒரு காரிலும் வந்தனர்.

அவர்கள் தங்களுடன் முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர். அவர்கள் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.