கவர்ச்சி காட்ட கட்டாயப்படுத்துகிறார்கள் - மனம் திறந்த பிரியாமணி

Priyamani Only Kollywood Tamil Cinema Gossip Today
By Sumathi Jun 27, 2022 11:58 PM GMT
Report

கவர்ச்சிக்காக தமிழ் நடிகைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக நடிகை பிரியாமணி ஓபனாக பேசியுள்ளார்.

 பிரியாமணி

நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் முன்னணியில் இருக்கும் அனைத்து நடிகர்களுடன் நடித்தார்.

priyamani

கண்களால் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், பருத்தி வீரன் திரைப்படம் மூலம் ஸ்டார் நடிகை அந்தஸ்தைப் பெற்றார். தேசிய விருது கிடைத்த அந்தப் படத்துக்குப் பிறகு பிரியா மணிக்கு படங்கள் வரிசையாக வந்தது.

 சர்ச்சை

ஆனால், திடீரென திரையில் இருந்து மறைந்துபோனார். படங்கள் ஏதும் இல்லாததால் 2017 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்தார். சில ஆண்டுகள் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர்,

kollywood

படங்களில் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் வெப்சீரிஸ் மற்றும் சினிமாக்களில் நடிக்க வாய்ப்புகள் மீண்டும் வந்ததால் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பேம்லிமேன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சவால்கள்

அசுரன் ரீமேக்கிலும் நடித்த அவர், ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிப்புக்கு திரும்பியது குறித்து பேட்டியளித்துள்ள பிரியாமணி, தமிழ் திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்களையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது சில நடிகைகள் வலுக்கட்டாயமாக கிளாமர் ரோலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு, தமிழ் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு. இருப்பினும் வேண்டும் என்றே

நடிகைகள் கிளாமர் சீன்களில் நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இப்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

திருமணத்தில் மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ!