உடலுறவு ஒருவரின் தனிப்பட்ட விஷயம்..யாரும் தலையிட முடியாது! - நடிகை பரபரப்பு பேட்டி

Pregnancy Viral Video Bollywood Marriage
By Sumathi Jul 10, 2022 07:06 AM GMT
Report

பிரபல நடிகை தியா மிர்ஸா சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலாகிறது. அதில், திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வது பற்றி வெளிப்படையாக பேசியியுள்ளார்.

 நடிகை தியா மிர்ஸா

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தவர் தியா மிர்ஸா. தற்போது பாலிவுட் படங்களிலும், வெப் சீரியல்களிலும் நடித்து வரும் நடிகை தியா மிர்ஸா, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.

diya mirza

அண்மையில் தியா மிர்ஸா வெளியிட்ட கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வது, கர்ப்பமாவது, குழந்தைப் பெற்றுக் கொள்வது என்பது

 தனிப்பட்ட உரிமை 

ஒருவரின் தனிப்பட்ட உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என்று தியா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை பறித்த அண்மை சட்டத்தையும்,

premarital sex

அதை எதிர்த்த போராட்டங்களையும் பற்றி தனது கருத்தை தெரிவித்தார்.ஹைதராபாத்தை சேர்ந்த நடிகை தியா தனது முதல் கணவரான திரைப்படத் தயாரிப்பாளர் சாஹில் சங்காவை 2019ம் ஆண்டில் பிரிந்த பிறகு, கடந்த ஆண்டு

பெண் அய்யர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வைபப் ரேகியை திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணத்தை, பெண் அய்யர் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு திருமணமான பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அவருக்கு சில மாதங்களிலேயே குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்த என் சுவாசக் காற்றே படத்தில்

 உடலுறவு

ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழில் தனது காலை பதித்தார். பெங்காலி, ஈரான் மொழிப் படங்களிலும் நடித்துள்ள தியா, 'பீட்' படத்திலும், 'தக் தக்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

கல்யாணம் செய்வதற்கு முன்பு உடலுறவு கொள்வதும், குழந்தைப் பெற்றுக் கொள்வது கர்ப்பம் குறித்து சமூகத்தில் பிற்போக்கு எண்ணங்களே பரவலாக இருப்பதாக தியா தெரிவித்தார்.

உண்மையில், திருமணமும், குழந்தைப்பேறும் அவரவர் உரிமை என கூறும் தியா, தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என தெரிவித்துள்ளார். இந்த வெளிப்படியான பேச்சு பரவலாக பேசப்படுகிறது.

தாயுடன் தகாத உறவு.. 3வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. வெறிச்செயலால் நடந்த பரிதாபம்!