இயற்கைக்கு மாறான உடலுறவு - தப்பி ஓடிய மனைவி!

Sexual harassment Karnataka
By Sumathi Jun 04, 2022 12:51 PM GMT
Report

இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டு அதை வீடியோவாகவும் எடுத்த கணவனின் செயலை கண்டு அலறியடித்து மனைவி ஓடி இருக்கிறார் மனைவி.

கணவரின் வெறிச்செயல்:

கர்நாடகா, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர், சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் பெங்களூருவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இயற்கைக்கு மாறான உடலுறவு - தப்பி ஓடிய மனைவி! | Husband Who Videotaped It Wife Who Ran Away

வீடியோவான அந்தரங்கம்:

அப்போது மனைவியிடம் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டு அதேநேரம் அதை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து மேலும் சித்திரவதை செய்திருக்கிறார் கணவர். அவரின் அந்த சைக்கோ தனங்களை தாங்க முடியாமல் தவித்து வந்த மனைவி கடந்த 2019 ஆம் ஆண்டில் தாய் வீட்டிற்கே சென்றிருக்கிறார்.

இயற்கைக்கு மாறான உடலுறவு - தப்பி ஓடிய மனைவி! | Husband Who Videotaped It Wife Who Ran Away

இதுகுறித்து புகார் அளித்ததில் ராய்ப்பூர் போலீசார் இந்த குற்றம் பெங்களூருவில் நடந்தது என்பதால் பெங்களூர் போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த வழக்கை விசாரித்த பெங்களூர் நீதிமன்ற நீதிபதி நாக் பிரசன்னா, போலீஸாரின் மெத்தனப் போக்கை கடுமையாக கண்டித்திருக்கிறார்.

போலீசார் இந்த வழக்கில் முழு விசாரணையை நடத்த வேண்டும். இந்த வழக்கை விசாரிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபி, மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.