நடிகர் 'மம்முட்டிக்கு' ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பு அங்கீகாரம் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடிகர் மம்முட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் அவரின் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
தபால் தலை
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 72 வயதாகும் மம்முட்டி இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த வயதிலும் இளைமையாக இருக்கும் அவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது பிரம்மயுகம் என்ற மலையாள படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் மம்முட்டியின் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் மற்றும் பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு அங்கீகாரம்
அவர்கள் மம்முட்டியின் உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டு அதனை இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்பிரீத் வோராவிடம் வழங்கினர். இந்த சிறப்பு தபால் தலை ஆஸ்திரேலியா சந்தைக்கு உடனடியாக வந்தது.
மேலும், இந்த தபால் தலைகள் வரும் நாட்களில் தபால் சேவைகளில் பயன்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் ஆண்ட்ரூ சார்டன் பேசியதாவது "மம்முட்டி இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார்.
அவரது கலை சேவையை பாராட்டுகிறோம்'' என்று பேசினார். ஆஸ்திரேலியா நாட்டில் கிடைத்த இந்த சிறப்பு அங்கீகாரம் மம்முட்டி ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.