ட்ரீம் லெவனில் அடித்த 1.5 கோடி.. பின்னாலயே சப்-இன்ஸ்பெக்டருக்கு வந்த சஸ்பெண்ட் லெட்டர் - நடந்தது என்ன?
சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ட்ரீம் லெவனில் 1.5 கோடி அடித்ததால் சஸ்பெண்ட் செய்யபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரீம் லெவன்
மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் சோம்நாத் ஷிண்டே, இவர் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் ட்ரீம் லெவன் என்ற செயலியில் கிரிக்கெட்டில் அணியை தேர்வு செய்ததன் மூலம் 1.5 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
இவர் கோடிக்கணக்கில் வென்றது அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் வேகமாக பரவியது. காவல்துறைக்கும் இது குறித்து தெரியவந்தது, இதனால் அவர் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.
சஸ்பெண்ட்
இந்நிலையில், விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் சோம்நாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தவறான நன்னடத்தை மற்றும் காவல்துறையின் பெயருக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அவர் அவர் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபபட்டது, போலீஸ் உடையுடன் பேட்டியளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.