ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் ஆபாசம் காட்டி அத்துமீறிய காவலர் - அதிர்ச்சி!

Chennai Sexual harassment Crime
By Vinothini Nov 19, 2023 08:55 AM GMT
Report

காவலர் ஒருவர் இளம்பெண்ணிடம் அத்துமீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் ஆபாசம்

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இனம்பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார் .

police-harrased-lady-by-showing-his-private-parts

அப்பொழுது ஆண் ஒருவர் தனது பிறப்புறுப்பை திடீரென காண்பித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீடியோ எடுத்து அவரிடம் வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதும் அவர், "நான் போலீஸ்தான் உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கோ" என்று தெனாவெட்டாக கூறியுள்ளார்.

இரவானாலே பாலியல் டார்ச்சர் செய்யும் கணவர்.. ஆத்திரத்தில் அந்த உறுப்பில் மிதித்தே கொன்ற மனைவி - கொடூரம்!

இரவானாலே பாலியல் டார்ச்சர் செய்யும் கணவர்.. ஆத்திரத்தில் அந்த உறுப்பில் மிதித்தே கொன்ற மனைவி - கொடூரம்!

காவலர்

இந்நிலையில், ஓடும் ரயிலில் குதித்து தப்பி சென்றார். பின்னர், அந்தப் பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே காவலர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்ததோடு அந்த வீடியோக்களையும் சமர்ப்பித்துள்ளார்.

arrest

மேலும், போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்த பெண் அளித்த வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.