இரவானாலே பாலியல் டார்ச்சர் செய்யும் கணவர்.. ஆத்திரத்தில் அந்த உறுப்பில் மிதித்தே கொன்ற மனைவி - கொடூரம்!

Attempted Murder Death Theni
By Vinothini Nov 17, 2023 07:18 AM GMT
Report

பெண் ஒருவர் தனது கணவரின் மர்ம உறுப்பில் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

தேனி மாவட்டம், போடி ஜூவாநகரை சேர்ந்தவர் ரமேஷ், 47 வயதான இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இருவருக்கும் திருமணமாகி சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ரமேஷுக்கு ஏலக்காய் தோட்டம் இருப்பதாக கூறப்படுகிறது, அதனால் கேரளாவிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

wife-killed-husband-by-attacking-his-private-part

இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று திடீரென ரமேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி போடி அரசு மருத்துவமனையில் அவரது மனைவி சேர்த்தார்.

பயங்கர வயிற்று வலி.. 11 வயது மாணவிக்கு ஆசிரியர்கள் செய்த கொடுமை - அதிர்ச்சி!

பயங்கர வயிற்று வலி.. 11 வயது மாணவிக்கு ஆசிரியர்கள் செய்த கொடுமை - அதிர்ச்சி!

கொலை

இந்நிலையில், எவ்வளவு முயன்றும் மருத்துவர்களால் அவரை காப்பாற்றமுடியவில்லை. பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், அப்பொழுது ரமேஷ் உடலில் நகக்கீறல், தோள்பட்டை பகுதியில் காயம் மற்றும் மர்ம உறுப்பில் காயம், இருந்துள்ளது, பின்னர் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

wife-killed-husband-by-attacking-his-private-part

இது குறித்து அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர், அப்பொழுது அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவரது வாக்குமூலத்தில், "எனது கணவர் தினமும் குடித்து விட்டு பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் நான் அதற்கு மறுத்து வந்தேன். அப்படி இருந்தத போதிலும் அவரது தொல்லை தாங்க முடியவில்லை.

சம்பவத்தன்றும் என்னிடம் உறவுகொள்ள முயன்றபோது அவரை தாக்கி கீழே தள்ளினேன். மேலும் அவரை அடித்து தள்ளியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் மர்ம உறுப்பில் மிதித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.