அழகுபடுத்த ஆசையாக பார்லருக்கு சென்ற பெண் - எண்ணெய் தடவியதும் கையோடு கொத்தாக வந்த முடி!

India Telangana Hyderabad
By Vinothini Aug 04, 2023 01:41 PM GMT
Report

பெண் ஒருவர் முடி வெட்டுவதற்கு பார்லருக்கு சென்றவர் மொட்டையாக திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்லருக்கு சென்ற பெண்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் ஓல்ட் சிட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் ஆசை பட்டதற்காக தனது நீண்ட முடியை வெட்டுவதற்காக பார்லருக்கு சென்றார். அவர் ஸ்டைலாக முடி வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பார்லருக்கு சென்றார்.

women-lost-her-hair-in-parlour

அங்கு அவருக்கு ஒருவித எண்ணெய் தடவி முடியை வெட்டினார். ஆனால் எண்ணெய் தடவிய உடன் முடி கொட்ட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் உச்சந்தலையில் இருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்தது.

விசாரணை

இந்நிலையில், அனைத்து முடியும் கொட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டிற்கு ஓடினார். வீட்டில் இருந்த கணவர் அவரது தலையில் முடி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

women-lost-her-hair-in-parlour

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் தனது தலையில் இருந்து உதிர்ந்த தலைமுடியை கையேடு எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றார். தனது தலைமுடியை இழக்க காரணமான பியூட்டி பார்லர் மீது புகாரளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.