இதோ சூப்பர் பம்பர் ரெடி...10 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப பிரதமர் அதிரடி உத்தரவு..!
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
அதிரடி உத்தரவு
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பலரும் தங்கள் வேலைகளை இழந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சங்களில் மனித வளத்தின் நிலையை ஆய்வு செய்தார்.
இதையடுத்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பணியிடங்களை மிஷன் மோட் எனப்படும் வேக கதியில் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதை உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பால் அரசு வேலைக்கு முயற்சிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம்