காலரா நோய் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் - தமிழிசை சவுந்தரராஜன்..!

Smt Tamilisai Soundararajan Puducherry
By Thahir Jul 05, 2022 08:56 PM GMT
Report

காலரா நோய் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்கள் அச்சமடைய வேண்டாம் 

காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கு காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

காலரா நோய் குறித்து  மக்கள் அச்சமடைய வேண்டாம் - தமிழிசை சவுந்தரராஜன்..! | People Should Not Panic About Cholera

மேலும், மாவட்டத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம், ரயில் நிலையம்,

பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தம் செய்து பீளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாக கூறிய புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார், மேலும். மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!