அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து; 25 பேர் படுகாயம் - ஒருவர் பலி!

Accident Thanjavur Death
By Sumathi Apr 24, 2024 06:35 AM GMT
Report

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்து விபத்து

தஞ்சாவூர், கும்பகோணத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தஞ்சை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து; 25 பேர் படுகாயம் - ஒருவர் பலி! | One Died Government Bus Accident Thanjavur

அப்போது அய்யம்பேட்டை அருகே மானங்கோரை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதன்பின், சாலையோர வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்தது.

ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 2 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 2 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

ஒருவர் பலி

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த 50 வயதான லட்சுமி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து; 25 பேர் படுகாயம் - ஒருவர் பலி! | One Died Government Bus Accident Thanjavur

மேலும் 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.