ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 2 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

Coimbatore Accident Death Tenkasi
By Sumathi Apr 08, 2024 04:58 AM GMT
Report

ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

 பேருந்து விபத்து

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் அருகே தென்காசியில் இருந்து கோயமுத்தூர் சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

bus accident

இதில் சம்பவ இடத்திலேயே முத்துசெல்வி, கார்த்திக் என்ற இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி மோதி கோர விபத்து - 3 பேர் பலி!

மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி மோதி கோர விபத்து - 3 பேர் பலி!

இருவர் பலி

உடனே சம்பவ இடம் விரைந்த வத்திராயிருப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் மதுரை கொல்லம் தேசிய - நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 2 பேர் பலி, 30 பேர் படுகாயம்! | Omni Bus Overturned On Srivilliputhur 2 Dead

அதன்பின், காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.