ஒருவனுக்கு ஒருத்தியா; அதெல்லாம் கிரிஞ்ச்.. குழந்தைங்க நிலை - விளாசிய நீலிமா ராணி

Tamil Cinema Neelima Rani Tamil TV Serials
By Sumathi Jul 02, 2024 09:30 AM GMT
Report

கணவன் - மனைவி பிரிவது குறித்து பல தகவல்களை நீலிமா ராணி பகிர்ந்துள்ளார்.

நீலிமா ராணி

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

neelima rani

திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். கடைசியாக அவர் ஆகஸ்ட் 16 1947 படத்தில் கௌதம் கார்த்திக்கிறகு அம்மாவாக நடித்தார்.

இதற்கிடையில் காதலித்து இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,

என் மார்பை பார்த்து எதாவது பேசினால் இதைத்தான் சொல்லத் தோணும் - நீலிமா ராணி பதிலடி!

என் மார்பை பார்த்து எதாவது பேசினால் இதைத்தான் சொல்லத் தோணும் - நீலிமா ராணி பதிலடி!

திருமண பந்தம்

ஒருவருக்கு ஒருவர் என்று வாழ்வதெல்லாம் இப்போது கிரிஞ்ச் போல பார்க்கப்படுகிறது. இது உண்மையிலேயே மிக மிக தவறான விஷயமாகும். திருமணத்திற்குப் பிறகு, குழந்தைகள் வந்த பிறகு, நீங்கள் பிரிவை மேற்கொள்ளும் பொழுது அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையானது வேறு மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.

ஒருவனுக்கு ஒருத்தியா; அதெல்லாம் கிரிஞ்ச்.. குழந்தைங்க நிலை - விளாசிய நீலிமா ராணி | Neelima Rani About Parents Separation

அந்த குழந்தைகளை மகிழ்ச்சி இல்லா சூழ்நிலைக்கு தள்ள உங்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது. நான் இங்கு பணத்தைப் பற்றி பேசவில்லை. புகழைப் பற்றி பேசவில்லை.

ஒரு உயிரை நீங்கள் மகிழ்ச்சி இல்லா சூழ்நிலைக்கு தள்ள உங்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்றுதான் சொல்கிறேன் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.