என் மார்பை பார்த்து எதாவது பேசினால் இதைத்தான் சொல்லத் தோணும் - நீலிமா ராணி பதிலடி!

Neelima Rani Tamil TV Serials
By Sumathi Feb 01, 2024 02:30 PM GMT
Report

நெகட்டிவ் கமெண்டுகளுக்கு நடிகை நீலிமா ராணி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நீலிமா ராணி

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

actress neelima rani

திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். கடைசியாக அவர் ஆகஸ்ட் 16 1947 படத்தில் கௌதம் கார்த்திக்கிறகு அம்மாவாக நடித்தார். இதற்கிடையில் காதலித்து இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மேலாடை இல்லாமல்.. எனக்கு அது ஒரு விஷயமாகவே தெரியல - நடிகை நீலிமா வெளிப்படை பேட்டி!

மேலாடை இல்லாமல்.. எனக்கு அது ஒரு விஷயமாகவே தெரியல - நடிகை நீலிமா வெளிப்படை பேட்டி!

நெகட்டிவ் கமெண்டுகள்

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், என்னுடைய மார்பகங்களை பற்றி கமெண்ட் செய்யும்போது உடனே ஒன்று சொல்ல தோன்றும். அது என்னவென்றால், நான் இன்னும் எனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருக்கேன்.

என் மார்பை பார்த்து எதாவது பேசினால் இதைத்தான் சொல்லத் தோணும் - நீலிமா ராணி பதிலடி! | Neelima Rani About Negative Comments Of Body

பரவாயில்லை. அவனுக்கு எல்லாம் பதில் சொல்ல என்ன ஆகப்போகுது என்று நினைத்து அந்த கமெண்ட்டை டெலிட் செய்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை ப்ளாக் செய்துவிடுவேன். அதேபோல் என்னுடைய வெயிட் பற்றியும் நெகட்டிவ்வாக கமெண்ட்ஸ் வரும். அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எனக்கே தெரியும் வெயிட் குறைவதற்கு ஒரு டைம் எடுக்கும் என்று.

முக்கியமாக இப்போ ஒரு இடத்தில் இருக்கோம். இதைவிட இன்னும் நல்ல நிலைக்கு செல்ல நேரம் எடுக்கத்தான் செய்யும். நான் இரண்டு குழந்தைகளை பெற்றவள். இரண்டு முறை எனது உடலில் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் புரிந்ததால்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.