பைத்தியத்தை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை; சாக்கடை ஜென்மம் - சீமானை விளாசிய பிரபலம்!

Coimbatore Seeman Nanjil Sampath
By Sumathi Feb 24, 2025 06:20 AM GMT
Report

பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்று சீமானை நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

சீமான் 

கோவையில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார்.

nanjil sampath - seeman

அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன். தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல்

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல்

நாஞ்சில் சம்பத் கொதிப்பு

அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான்.

பைத்தியத்தை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை; சாக்கடை ஜென்மம் - சீமானை விளாசிய பிரபலம்! | Nanjil Sampaths Against Seeman For Periyar

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்?

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது; திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என கடுமையாக தாக்கியுள்ளார்.