நாங்குநேரி சாதி வெறி தாக்குதல்: +2 தேர்வில் சாதித்த மாணவன் - மதிப்பெண் தெரியுமா?

Tamil nadu Tirunelveli
By Jiyath May 06, 2024 07:58 AM GMT
Report

சாதி ஆணவத்தால் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். 

சின்னத்துரை 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதியினர் முனியாண்டி - அம்பிகாபதி. இவரது மகன் சின்னத்துரை (17) என்பவர் வள்ளியூரிலுள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

நாங்குநேரி சாதி வெறி தாக்குதல்: +2 தேர்வில் சாதித்த மாணவன் - மதிப்பெண் தெரியுமா? | Nanguneri Student Chinnadurai Hsc Exam Result

இதனிடையே கடந்த ஆண்டு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த 3 பேர், சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சை பெற்றனர்.

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

தேர்வாகி அசத்தல் 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சாதிய வன்மத்தால் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை தனது 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.

நாங்குநேரி சாதி வெறி தாக்குதல்: +2 தேர்வில் சாதித்த மாணவன் - மதிப்பெண் தெரியுமா? | Nanguneri Student Chinnadurai Hsc Exam Result

இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வை எழுதிய அவர், 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். சின்னத்திரைக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.