நள்ளிரவில் நிர்வாண பார்ட்டி; கலந்துக்கொண்ட வளர்ப்பு மகள்? கொந்தளித்த புதின்!
சமீபத்தில் நடந்த நிர்வாண பார்ட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாண பார்ட்டி
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பக்கம் போர் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், மாஸ்கோவில் முடபோர் நைட் கிளப் என்ற இடத்தில் பிரபலங்கள் கலந்து கொண்ட கிட்டத்தட்ட நிர்வாண பார்ட்டி நடந்துள்ளது.
இது குறித்த போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அனஸ்தேசியா இவ்லீவா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில், நிகோலாய் வாசிலியேவ் என்பவர் சாக்ஸை மட்டுமே அணிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த ஃபோட்டோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
புதின் நடவடிக்கை
ரஷ்ய படை இது குறித்து புகாரளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பான இணையத்திற்கான லீக்கின் இயக்குநர் யெகாடெரினா மிசுலினா கூறுகையில், "உக்ரைனில் நமது வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
அங்கே பலர் வீர மரணம் அடைந்து வருகிறார்கள். இதனால் பல குழந்தைகள் தங்கள் தந்தையைக் கூட இழந்து வருகின்றனர். அவர்கள் அப்படிப் போராடும் போது இப்படி பார்ட்டி வைத்து கூத்தடிப்பது நிச்சயம் சரியான நடைமுறை இல்லை" எனத் தெரிவித்துள்ளார். இதில் பிரபல டாப் நட்சத்திரங்களான பிலிப் கிர்கோரோவ், லொலிடா மற்றும் டிமா பிலன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ரஷ்ய அதிபர் புதினால் வளர்க்கப்படும் (goddaughter) க்சேனியா சோப்சாக் என்பவரும் கலந்து கொண்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.