நடிகையுடன் டேட்டிங்கில் நாக சைதன்யா - பொங்கி எழுந்த சமந்தா..!
நடிகையுடன் முன்னாள் கணவர் நாக சைதன்யா டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் பரவி நிலையில் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா ட்விட்டர் பதிவில் பொங்கி எழுந்துள்ளார்.
விவாகரத்து
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிட்டதட்ட 3 வருடங்கள் மண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக அவர் அறிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த சமந்தா கவச்சியான வேடங்களிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தது விவாகரத்து பிரச்சனைக்கு காரணமாக சொல்லப்பட்டது.
தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா நடிப்பில் தமிழில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.
நடிகையுடன் டேட்டிங்
கடந்த சில நாட்களாக நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றித் திரிவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இதை பார்த்த நாக சைதன்யாவின் ரசிகர்கள் இப்படி ஒரு வதந்தியை பரவ விட்டது சமந்தாவின் பி ஆர் டீம் தான் என்று கூறி வருகின்றனர்.
கோபமடைந்த சமந்தா
இதனால் சமந்தா தற்போது உச்ச கட்ட கடுப்பில் இருக்கிறார். அதன் விளைவாக அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு டிவீட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரு பெண்ணை பற்றிய வதந்தி வந்தால் அதை அப்படியே உண்மை என்று நம்புகிறோம்.
அதுவே ஒரு ஆணைப் பற்றிய வதந்தி வந்தால் அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட பெண் தான் என்று எப்படி உங்களால் பேச முடிகிறது என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Rumours on girl - Must be true !!
— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022
Rumours on boy - Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan

Viral Video: கழுகை மீண்டும் மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க வைத்த மீன்! இறுதியில் நடந்த டுவிஸ்ட் Manithan
