சமந்தா விவாகரத்துக்கு காரணம் இந்த நபரா? - இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

actresssamantha actornagachaithanya samanthdivorceissue
By Petchi Avudaiappan Apr 08, 2022 12:24 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகை சமந்தா தனது மேனேஜரை மாற்றியுள்ள நிலையில் அதுகுறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டதட்ட 3 வருடங்கள் மண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக அவர் அறிவித்தார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த சமந்தா கவச்சியான வேடங்களிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தது விவாகரத்து பிரச்சனைக்கு காரணமாக சொல்லப்பட்டது. தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா நடிப்பில் தமிழில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகவுள்ளது. 

இதனிடையே சமந்தா தமிழில் அறிமுகமான மாஸ்கோவின் காவேரி படம் முதல் தற்போது வரை அவரின் மேனேஜராக பணியாற்றி வந்த மகேந்திரன் பாபு என்பவர் தான் நாக சைதன்யாவின் மேனேஜராகவும் இருந்து வருகிறார். விவாகரத்துக்கு பின்னும் இவர் தொடர்ந்து இருவரிடமும் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில்  தன்னுடைய தற்போதைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நாக சைதன்யாவிடம் பகிர்ந்து கொள்ளக்கூடும் என்பதால் மகேந்திரன் பாபுவை சமந்தா மாற்றியுள்ளார். மேலும் இந்தி பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ள சமந்தா புதிய மும்பை மேலாளர் ஒருவரிடம் தனது பணிகளை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் ஒருவேளை மனோகர் எட்டப்பனாக இருந்து இருவரின் பிரிவுக்கும் காரணமாக இருந்திருப்பாரோ என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.