கொலை வழக்கில் கைதான நடிகை - போலீஸ் கஸ்டடியிலேயே செய்த பகீர் காரியம்!

Karnataka India Indian Actress Crime Actress
By Jiyath Jun 29, 2024 10:30 AM GMT
Report

கொலை வழக்கில் கைதான நடிகை மேக்கப் போட்டுக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கொலை 

கர்நாடகாவில் மாநிலம் பெங்களூருவில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் சமீபத்தில் மீட்கப்பட்டது. இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் ரேணுகா சுவாமி என்றும், கன்னட நடிகர் தர்ஷன், அவரை ஆள்வைத்து கொலை செய்ததும் தெரியவந்தது.

கொலை வழக்கில் கைதான நடிகை - போலீஸ் கஸ்டடியிலேயே செய்த பகீர் காரியம்! | Murder Accused Pavithra Gowda Applies Makeup

மேலும், ஏற்கெனவே திருமணமான நடிகர் தர்ஷன் கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பவித்ரா கவுடாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தர்ஷனின் ரசிகரான ரேணுகா சுவாமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவித்ரா கவுடா குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன், ரேணுகா சுவாமியை கொடூரமாக அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தாயை பிரிந்து முகாமில் தவித்த குட்டி யானை - வனத்துறை வெளியிட்ட சோக செய்தி!

தாயை பிரிந்து முகாமில் தவித்த குட்டி யானை - வனத்துறை வெளியிட்ட சோக செய்தி!

மேக்கப்புடன் நடிகை 

இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே நடிகை பவித்ரா கவுடாவை குற்றம் நடந்த இடத்தை பற்றிய விவரங்களை பதிவு செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

கொலை வழக்கில் கைதான நடிகை - போலீஸ் கஸ்டடியிலேயே செய்த பகீர் காரியம்! | Murder Accused Pavithra Gowda Applies Makeup

அப்போது, ​​தனது வீட்டிலிருந்து பவித்ரா கவுடா போலீசாருடன் திரும்பி வரும்போது லிப்ஸ்டிக் உள்ளிட்ட மேக்கப் போட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே வெளியே வந்துள்ளார். இந்த வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில்,

சிறை கைதிக்கு மேக்கப் போட்டுக்கொள்ள அனுமதி அளித்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.