தோனிக்கு 'புது ரோல்' இதுதான்; யார் மாற்று கேப்டன் - கசிந்த தகவல்!
சிஎஸ்கேவில், தோனிக்கு புது ரோல் வழங்கப்பட்டுள்ளது.
தோனி
ஐபிஎல் 17ஆவது சீசன், மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கிடையில், மகேந்திரசிங் தோனி.
16ஆவது சீசன் முடிந்த உடன் ஓய்வு அறிவிப்பார் எனக் கருதப்பட்ட நிலையில் அவ்வாறு நடக்கவில்லை. அதன்பின், அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால், 17ஆவது சீசனில் தோனி ஆட மாட்டார், ஓய்வு அறிவித்துவிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், 17ஆவது சீசன் துவங்கவுள்ள நிலையில், அவர் பயிற்சியின்போது, சிக்ஸர்களை பறக்கவிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புது ரோல்?
இந்நிலையில், தற்போது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள தோனி, ''புது சீசன், புது ரோலை எதிர்நோக்கி, ஆவலுடன் காத்திருக்கிறேன். காத்திருந்தங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தோனி வீரராக மட்டுமே ஆடுவார், கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும், தோனி ஆலோசகராக செயல்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம்: கிடைத்தது கருப்பு பெட்டி - ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan
