நெருங்கும் ஐபிஎல் - ரசிகர்களுக்கு குண்டை தூக்கி போட்ட தோனி - புதிய ரோல்..?
தோனியின் புதிய சமூகவலைத்தள பதிவு ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இம்முறை "Defending Champions".
இந்த சீசன் தான் தோனி கடைசியாக இருக்கும் என மீண்டும் கருத்துக்கள் உலா வர துவங்கிவிட்ட நிலையில், தற்போதே சென்னை அணி ரசிகர்கள் தொடர் மீது பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
ஆனால், வழக்கம் போலவே அப்படி இருக்காது என்ற பேச்சும் நீடித்து வருகின்றது. இந்த சூழலில் தான் இந்த சீசனை எதிர்கொள்ள சென்னை அணி மிக தீவிரமாக தயாராகி வருகின்றது. வரும் 22-ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியிலேயே சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புது ரோல்..?
தற்போது சென்னை அணியின் வீரர்கள் பயிற்சியை துவங்கி விட்ட நிலையில், கேப்டன் தோனி அம்பானி மகன் திருமணத்தில் இருப்பதால்,அவர் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தோனி பதிவிட்ட சமூகவலைத்தள பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "புதிய சீசனில் புதிய வேலைக்காக (ரோல்) காத்திருக்க முடியவில்லை. காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் பெரிதாக பயன்படுத்திடாத தோனி, ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என்பதால் இது நிச்சயம் எதோ முக்கியமானதாக தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.